தினம் ஒரு திருக்குறள்

 திருக்குறள் :


பணிவுடையன் இன்சொலன் ஆதல்  ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற.


மு வ உரை :


வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும். மற்றவை அணிகள் அல்ல.


சாலமன் பாப்பையா உரை :


தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா.


கலைஞர் உரை :


அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது.

Comments

Popular Posts